Ads (728x90)




அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுள்லாஹி வபரகாதுஹு .

அன்பார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு......

இன்று அனைவரினதும் பேச்சு "ஹலால் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை எடுத்த முடிவு தொடர்பாகவே இருகின்றது" பற்பலரும் இந்த விடயத்தை வெவேறு பார்வையிலும் பேச்சுகளிலும் விமர்சித்து கொண்டிருக்கும் இந்த வேளையில் அவசரமான ஒரு மடல்

இது போன்ற பிரச்சினைகள் ஊடாக எமது முஸ்லிம் சமூகத்தினுள் பிரிவினைகளை உண்டாக்கி எமது உணர்சிகளை தூண்டி எம்மை பிரித்து ஆளும் சூழ்ச்சி நடக்கிறது.

இஸ்லாமிய சகோதரர்களே..

இது போன்ற பிரிவினைகள் எம்மையும் எமது தூய மார்கபற்றையும் எமது சமூகத்தயும் பலவீனமாக்கி விடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். அதற்கு எவ்வகையிலும் நாம் காரணமாகி விட கூடாது.எமது முஸ்லிம் புத்திஜீவிகள் எடுத்த முடிவுக்கு ஆதரவாக நாம் செவி சாய்ப்போம்.

ஒற்றுமையால் ஒன்றுபடுவோம்.அனைவரும் இதை ஒரு தோல்வியாகவே கருதி சமூக இனைய தளங்களில் தவறான கருத்தை பரப்பி வருகின்றனர். இல்லை சகோதரர்களே இல்லவே இல்லை நாம் தோல்வி அடையவில்லை. இப்படி வதந்திகளும் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளும் பரப்புவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

இது எமக்கு கிடைத்த தோல்வி அல்ல...

நாம் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டு இருகின்றோம். ஆம் இது போல பற்பல சூழ்சிகள் நடந்தேறி இருக்கின்றன. நடக்கவும் இருக்கின்றன. இவை அனைத்தையும் அல்லாஹாவின் மார்க்கத்தை கொண்டும் அமைதியை கொண்டும் வெற்றி அடைவோம். சகோதரர்களே இது ஹலாலுக்கான முடிவாக இருந்தாலும் கூட எமக்கு எதிராக முடுக்கி விடபட்டுள்ள அந்நிய சக்திகளின் ஆரம்ப படியாகவே இருகின்றது.

அவர்கள் எமக்கு எதிராக எத்தனை பிரகடனம் கொண்டு வந்தாலும்,எத்தனை எதிர்ப்பை கொண்டு வந்தாலும் வெற்றி நமக்கே. அல்லாஹ் எம்முடன் இருகின்றான். நாம் அல்லாஹாவை பயந்து கொள்வோம்.. இது அல்லாஹ்வுடைய மார்க்கம்.. இதை அல்லாஹ் நிச்சயம் பாதுகாப்பான்...

நாம் அல்லாஹாவிடம் பாதுகாவல் தேடுவோம். அல்லாஹ்விடம் பிரார்த்தனையால் முறை இடுவோம். ஒற்றுமையால் ஒன்று படுவோம். அமைதி இனால் அந்நிய சக்திகளை எதிர்த்து நிற்போம்...

இன்ஷாஹ் அல்லாஹ்

Post a Comment